• Thu. Apr 25th, 2024

கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ByA.Tamilselvan

Sep 13, 2022

‘மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’ என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை http://scholarships.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நடப்பு (2022 – 2023) கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆதாரில் உள்ளது போல் பதிவிட வேண்டும்.பெயரிலோ அல்லது முன் எழுத்திலோ ஏதேனும் மாற்றம் இருப்பின், ஆதாருடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து, வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் https://www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
CSSS திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு 30,000 ரூபாயும், முதுகலை பயில்வோருக்கு ஆண்டுக்கு 20,000 ரூபாய் வீதம் 2 ஆண்டுகளுக்கு 40,000 ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை htps://www.tndce என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்’ என்று மாநில உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *