கடந்த ஜுலை 25ம் தேதி மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கால், முதுகு எலும்பு என யாஷிகாவிற்கு உடம்பில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்6 மாதமாக படுத்த படுக்கையில் இருந்த யாஷிகா இப்போது நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வர ஆரம்பித்துள்ளார்.
அண்மையில் விபத்து நடந்து இடத்திற்கு சென்றுள்ள யாஷிகா தனது தோழி நினைத்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.பின் தன்னை ஆம்புலன்ஸ் ஏற்றிவிட்ட மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்.