கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப் – 7) ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்களுடைய தோஷங்கள் நீங்க நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
