• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அரணாக இருக்க வேண்டிய காவல்துறை, முரணாக மாறுவது ஏன்…! – தம்பி தேவேந்திரன்

Byமதி

Oct 23, 2021

கடலில் முழ்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில், மெரினா கடற்கரையில் “உயிர்காப்பு பிரிவு ” தொடங்கி வைத்தார் டி.ஜி.பி சைலேந்திர பாபு.

ஆனால், கடலில் குளிப்பதற்கு அனுமதி இல்லை, அதையும் மீறினால் அபராதம் மற்றும் உரிய தண்டனை என்று அறிவித்துள்ளார் டி,ஜி.பி சைலேந்திர பாபு.

எனவே, மூடிய கடற்கரையில் “மூழ்குவோரை காக்க எதற்கு தனிபிரிவு.
இதனால் கவலையில் மூழ்குவோர் தான் அதிகம். அரணாக இருக்க வேண்டிய காவல்துறை, முரணாக மாறுவது ஏன்…!
என கேள்வி எழுப்பியுள்ளார், தமிழ் மக்கள் கட்சியின் நிறுவனர்- மற்றும் தலைவரான
தம்பி தேவேந்திரன்.