• Thu. Apr 18th, 2024

ஓபிஎஸ்க்கு ஏன் ஓரவஞ்சனை? தொண்டர்கள் முணுமுணுப்பு…

Byமதி

Oct 23, 2021

அதிமுகவிற்கு சோதனை காலம் தான் இது. காரணம் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் அவர்கள் விட்டுச்சென்ற அதிமுக என்கின்ற ஆலமரம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரிடம் வளர்ந்து, அவர் இறந்த பிறகு கட்சி இருக்குமா இருக்காதா என்ற சூழ்நிலை தற்போது வரை நிலவி வருகிறது. ஏற்கனவே ஒரு முறை கட்சி முடக்கி மீண்டும் வந்தது.
தற்சமயம் கட்சி இருக்குமா என்ற சந்தேகத்துடன் இருந்து வருகிறார்கள் பலர்.

இக்கட்டான நேரங்களில் தற்போது பல முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை நிழல் சேலம் புத்திர கொண்டபாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் வீட்டில் ரெய்டு. இவர் மத்திய கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவராக இருந்து வருகிறார். கிழக்கு மாவட்ட அம்மா பேரவை மாநில செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் வீட்டில், சம்பந்தப்பட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வந்த கொண்டுள்ளனர். இதே வேளையில் கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்து பஸ்ஸில் ஏற்றினர்.

நேற்று முன்தினம் சசிகலா அம்மையார் தேவர் சமாதிக்கு செல்ல அனுமதி தேவை என கட்சி நிர்வாகிகள், காவல் துறையினரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். அவர்களை கட்சியில் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கி கடிதம் வந்தது. அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு பேரும் கையெழுத்திட்டனர். அதேபோல், கரூரில் முன்னாள் அமைச்சர் கைது கண்டித்து இரண்டு பேரும் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது. ஆனால், சேலத்தில் இளங்கோவன் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் பொழுது அதிமுக கட்சி லெட்டர் பேடில் முன்னாள் முதல்வர் மட்டும் கையெழுத்திட்டு அறிக்கை வந்தது வந்துள்ளது ஏன்? கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து போடவில்லை என அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கேள்வி கேட்ட வண்ணம் உள்ளனர். இதில் ஏன் ஓபிஎஸ் அவர்களுக்கு ஓரவஞ்சனை என முணுமுணுத்தபடி இருந்து வருகின்றனர். இவ்வாறு கட்சிக்குள் பல்வேறு பூசல்கள் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *