அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாள்தோறும் சூட்டைக் கிளப்பி வரும் நிலையில், அரசு தலைமை மருத்துவமனையிலும் ஒற்றைத் தலைமை விவகாரம் கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் கரூர் மாநகரில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு கொண்டிருப்பதால், எனவே குளித்தலையில் தான் அரசு தலைமை மருத்துவமனை அமையும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். இதனால் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இந்த சூழலில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.மாணிக்கம், குளித்தலையில் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கரூருக்கு சென்றுவிட்டதாக தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது உண்மை இல்லை. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.
மேற்குறிப்பிட்ட மூன்று பேரின் பேச்சுகளும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இப்படி மாற்றி, மாற்றி பேசுவதால் கொந்தளித்த அரசியல் கட்சிகள் இன்றைய தினம் (ஜூன் 27) அதிரடியான போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதாவது, குளித்தலை பகுதி மக்களுக்கு இணையும் வேண்டாம்… துணையும் வேண்டாம்… ஒற்றை தலைமை மருத்துவமனையே வேண்டும்.
குளித்தலை அரசு மருத்துவமனையை தமிழக அரசின் அரசாணையின் படி, கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்பட வலியுறுத்தி குளித்தலை அரசு மருத்துவமனை முகப்பில் ”கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை – குளித்தலை” என்ற பெயர் பலகை அமைக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது. சரியாக காலை 9.30 மணிக்கு போராட்டம் தொடங்குகிறது.
இதில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தளபதி விஜய் மக்கள் இயக்கம், எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு தலைமை மருத்துவமனை விவகாரத்திலும் ஒற்றை தலைமை தலை தூக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]