• Fri. Mar 29th, 2024

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் கதி என்ன?’டி.ஆர்.பாலு

ByA.Tamilselvan

Sep 7, 2022

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களின் கல்லூரி சேர்க்கை தொடர்பாக தீர்வு காணவேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பிரதமர் மோடிக்கு கடிதம்.

  • உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் மருத்துவ கல்லூரி சேர்க்கை தொடர்பான பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணவில்லை. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் உள்ள 604 மருத்துவ கல்லூரிகளில் ஒரு லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன. அதனை உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களுக்கு நிரப்ப ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *