• Tue. Apr 30th, 2024

சிவகாசியில் களைகட்டிய தெப்ப உற்சவம் :

ByG.Ranjan

Apr 17, 2024

சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நிகழ்வாக நேற்று (16.04.2024) தெப்ப உற்சவம் நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்ப தேரினில், மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி, 11 முறை தெப்பத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *