நோபல் பரிசுபெற்ற அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட, ‘மிஷனரிஸ் ஆஃப் சேரிடிஸ் ‘ என்ற அறக்கட்டளை மருத்துவ,சுகாதார சேவை பணிகளில்புகழ் பெற்றது.
இதனால்தான் தெரசா இந்திய மக்களால் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்படிருக்கின்றன என்றும் இதனால் சுமார் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருவதாகவும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (டிசம்பர் 27) தனது ட்விட்டர் மூலம் அதிர்ச்சி தெரிவித்தார். அவர் மேலும் , “ சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளில் சமரசம் செய்யக்கூடாது”என்றும் கூறினார். கிறிஸ்துமஸ் சமயத்தில் இந்த செய்தி பரவி இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஇந்த நிலையில் நேற்று (டிசம்பர் 27) இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக ஓர் விளக்கம் அளித்துள்ளது.

“நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவால் அமைக்கப்பட்ட கத்தோலிக்க மத சபையான மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டியின் (MOC) வெளிநாட்டு நிதி மற்றும் நன்கொடைகளைப் பெறுவதற்கான வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) சட்டத்தின்படியான உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. வெளிநாட்டு நிதிகள் அல்லது நன்கொடைகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) பதிவு செய்வது கட்டாயமாகும்.
அன்னை தெரசா அறக்கட்டளையின் FCRA விண்ணப்பம் அங்கீகரிக்கப்படாததால், அதனுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் இயக்கப்படவில்லை. டிசம்பர் 13 அன்று அன்னை தெரசா அறக்கட்டளை தாக்கல் செய்த 2020-21 ஆண்டு நிதி அறிக்கையின்படி, 347 வெளிநாட்டு நபர்கள் மற்றும் 59 நிறுவனநன்கொடையாளர்களிடமிருந்து 75 கோடிக்கு மேல் நன்கொடை பெற்றுள்ளது. முந்தைய ஆண்டிலிருந்து அதன் FCRA கணக்கில் 27.3 கோடி இருப்பு இருந்தது மற்றும் மொத்த இருப்பு 103.76 கோடியாக இருந்தது.
தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததற்காக டிசம்பர் 25 அதாவது கிறிஸ்துமஸ் அன்று அறக்கட்டளையின் FCRA புதுப்பித்தல் மறுக்கப்பட்டது. இந்த புதுப்பித்தலை மறுபரிசீலனை செய்ய மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி (MOC) யிடமிருந்து கோரிக்கை,மறுசீரமைப்பு விண்ணப்பம் எதுவும் பெறப்படவில்லை”என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்னை தெரசா அறக்கட்டளையின் சுப்பீரியர் ஜெனரல் என்று அழைக்கப்படும் தலைவி எம். பிரேமா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் FCRA புதுப்பித்தல் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தவறில்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை எஃப்சி (வெளிநாட்டு பங்களிப்பு) கணக்குகள் எதையும் இயக்க வேண்டாம் என்று எங்கள் மையங்களை கேட்டுக் கொண்டுள்ளோம்”என்று கூறியுள்ளார்.மேலும், “எங்கள் அறக்கட்டளையின் FCRA பதிவு இடைநிறுத்தப்படவில்லை அல்லது ரத்து செய்யப்படவில்லை. மேலும், எங்கள் வங்கிக் கணக்குகள் எதுவும் உள்துறை அமைச்சகத்தால் முடக்கப்படவும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]