• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

த.வெ.க மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு!

Byஜெ.துரை

Aug 21, 2025

மதுரையில் இன்று நடைபெற உள்ள த.வெ.க2-வது மாநில மாநாட்டிற்கு சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33)சென்னையில் இருந்து நண்பர்களுடன் நேற்று இரவு வேனில் புறப்பட்டாார்.

சற்று முன்னதாக மதுரை சக்கிமங்கலம் அருகே வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார் பிரபாகரன்.

சிறுநீர் கழிக்க சென்ற பிரபாகரனை காணவில்லை என நண்பர்கள் தேடிச்சென்ற பொழுது பிரபாகரன் மயக்க நிலையில் காணப்பட்டார்

இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.