• Fri. Mar 29th, 2024

விருதுநகரில் உணவு சேவை செய்து வரும் தன்னார்வ அமைப்பு..!

Byவிஷா

Apr 26, 2023

விருதுநகர் அரசு மருத்துவமனையில் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், தன்னார்வ அமைப்பினர் தினமும் நோயாளிகளுக்கு உணவு சேவை செய்து வருகின்றனர்.
இது குறித்து நோயாளிகளுக்கு தினமும் உணவு வழங்கி வரும் மோகன் என்பவர் தெரிவித்ததாவது..,
திருச்சியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் விருதுநகரில் கடந்த நான்குஆண்டுகளாகத் தினசரி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார் மோகன்.
பசிபிணியை போக்குவதற்கு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் தினசரி தாங்களே உணவினை தயார் செய்து வந்து அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் வெளிப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர் சிலருக்கு என தினசரி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிவருவதாக தெரிவித்தார். மேலும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகபணி செய்து வரும் இந்த சங்கம் விருதுநகரில் முதல் முறையாக தொடங்கிய போது கஞ்சி வழங்கி வந்ததாகவும், கொரோனாவுக்கு பின்னரே அன்னதானம் வழங்கும் திட்டமாக மாற்றப்பட்டு தற்போது தினசரி தோராயமாக 15,000 செலவு செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த செலவை நன்கொடையாளர்கள் உதவியோடு செய்துவருவதாக தெரிவித்தவர், நிறையபேர் தங்களின் பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளுக்கு அன்னதானம் வழங்க பணம் கொடுத்து உதவி வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஏழைகளுக்கு உணவளிக்க விரும்புவோர் 98421 01357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *