நடிகை த்ரிஷா தெலுங்கில் நடித்த “வர்ஷம்” திரைப்படம் ரீ ரீலிஸ் ஆகியுள்ளது . தனது ரசிகர்களுக்கு வீடியோவுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வனில் த்ரிஷா இளவரசி குந்தவையாக நடித்துள்ளார். டீசரிலே த்ரிஷாவின் லுக் பார்ப்போரை பிரமிக்க வைத்தது. 40 வயதிலும் குறையாத அழகுடன் இருக்கும் த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் மிக முக்கிய மான படமாக அமைந்தது. இந்நிலையில் தெலுங்கில் தான் முதன்முதலாக நடித்த “வர்ஷம் ” படம் ரீ ரீல்ஸ் ஆனதற்கு த்ரிஷா ட்விட்டரில் வீடியோவுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் “18 வருடத்திற்கு பிறகு படம் ரீ ரிலிஸ் ஆகியுள்ளது. நேற்றுதான் நடித்தது போல் உள்ளது. படங்கள் படங்கள்தான் ரசிகர்கள் உங்களால் தான் நான்” என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.