தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ,
உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வடுகபட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத்
தலைவர் பாலமுருகன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ,
துணைத் தலைவர் அன்புமுத்து, பற்றாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் பங்கஜவள்ளி தீர்மானங்களை வாசித்தார். அய்யங்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ,
துணைத் தலைவர் முருகேசன், பற்றாளர் வடிவு ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் தெய்வேந்திரன் தீர்மானங்களை வாசித்தார். தனிச்சியம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு மாரி செல்லப்பாண்டி தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் மணிவண்ணன், பற்றாளர் ஶ்ரீபிரியா ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் ராஜாங்கம் தீர்மானங்களை வாசித்தார். கொண்டையம்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் ரெங்கராஜன், பற்றாளர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் பங்கஜவள்ளி தீர்மானங்களை வாசித்தார். சின்னஇலந்தைகுளம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் மெர்லின் விமலா குமாரி, கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன், பற்றாளர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் சுவிதா தீர்மானங்களை வாசித்தார். கல்லணை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அய்யம்மாள், யூனியன் உதவி பொறியாளர் துர்காம்பிகை, ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு உள்ளிட்டா பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பழனிநாதன் தலைமையில் ஊராட்சி செயலாளர் ராஜா தீர்மானங்களை வாசித்தார். அச்சம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீசுதா முருகன் தலைமையில் ஊராட்சி செயலர் முருகேஸ்வரி கலந்து கொண்டு தீர்மானங்களை வாசித்தார். 15.பி.மேட்டுபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீபா நந்தினி மயில்வீரன் தலமை தாங்கினார் ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் தீர்மானங்களை வசித்தார். எர்ரம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், கூட்டுறவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் தெரு விளக்கு சாக்கடை வசதி பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]