வேலூர் மாநகரின் மத்தியில் 136 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை. வேலூர் கோட்டையை சுற்றியுள்ள சுமார் 16 அடி ஆழம் கொண்ட கோட்டை அகழியில் கனமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்ததால் கோட்டைக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக கோட்டையில் அமைந்துள்ள கோட்டை ஜலக்ணடெஸ்வரர் ஆலயமும் வெள்ள நீரில் மிதக்கிறது. பொது பணித் துறையினர் இதை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.