• Tue. Apr 16th, 2024

சோகத்தில் வாணி போஜன்! நடந்தது என்ன?

தமிழில் ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைதொடர்ந்து, துருவ் எப்போது தனது தந்தையுடன் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

அதற்கேற்ப துருவ்வும், விக்ரமும் இணைந்து தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகியது. இந்நிலையில் மகான் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மகான் படத்தில் நாயகிகளாக நடித்த வாணி போஜன் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே காட்சிகள் எதுவும் வரவில்லையாம். படத்தின் நீளம் காரணமாக அவர்களது காட்சியை நீக்கிவிட்டார்களாம். இதனால் வாணி போஜன் மற்றும் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *