• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

அடையாளம் தெரியாத பெண் பிரேதம் கைப்பற்றி போலீஸ் விசாரணை

ByKalamegam Viswanathan

Mar 4, 2025

மதுரை அவனியாபுரம் புறவழிச் சாலை ஈச்சனோடை பகுதியில் கோணி சாக்கிற்குள் கட்டிய நிலையில் பெண் பிணம் காணப்பட்டது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

40 வயது மதிக்க தக்க பெண் கொலை செய்யப்பட்டு சாக்கில் வைத்து புறநகர் பகுதியில் வீசியது யார் என்பது குறித்து, அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் தடைய அறிவியல் துறையினர், மோப்ப நாய் வரவலைக்கப்பட்டுள்ளது.
பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.