• Wed. Apr 24th, 2024

போரில் இறந்த குழந்தைகளை நினைவு கூர்ந்த உக்ரைன் மக்கள்

ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில், ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் நாட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில் வெள்ளியன்று எல்விவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ஏராளமான காலியான ஸ்ட்ரோலர்கள் (குழந்தைகளை அழைத்துச் செல்ல பயன்படும் தள்ளுவண்டி) அணிவகுத்து நின்றன.

பெரியவர்கள் போரை அறிவிக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள்தான் போராடி இறக்க வேண்டும். போருக்குப் பின் வரும் இன்னல்கள், துக்கம் மற்றும் வெற்றிகளை இளைஞர்கள்தான் பெற வேண்டும். இந்த வார்த்தைகள், தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா படையெடுப்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் கூறிய புகழ்பெற்ற வரிகளை நினைவுபடுத்துகிறது. இந்த கசப்பான உண்மையை வெளிப்படுத்தும் புகைப்படம் இது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிப்ரவரி 24 அன்றுஉக்ரேன்மீது “இராணுவ நடவடிக்கைக்கு” உத்தரவிட்டார். உக்ரைனில் தனது நடவடிக்கைகள் சிறப்பு ராணுவ நடவடிக்கைகள் என்றும், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

இருப்பினும், இந்த மோதல்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யா ஷெல் மற்றும் குண்டுவீச்சு காரணமாக கொல்லப்பட்ட குழந்தைகள் உட்பட மக்களுடன் இறப்பு மற்றும் அழிவை ஏற்படுத்தியது.
வெள்ளியன்று (மார்ச் 18) ல்விவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் நாட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில் ஏராளமான வெற்று ஸ்ட்ரோலர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, எல்விவ் நகர மண்டபம் 109 ஸ்ட்ரோலர்கள் அல்லது பிராம்களை நேர்த்தியான வரிசைகளில் வைத்தது – போரின் தொடக்கத்திலிருந்து கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தைகளும் நினைவுகூரப்பட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *