• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மேலூர் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து – ஒருவர் பலி

ByKalamegam Viswanathan

Feb 11, 2024

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்தானது. இதில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 37 வயதுடைய புரண்டிபட்டியை சேர்ந்த கார்த்திக் என்ற நபர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.