


திரிபுரா ,பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில் மேகாலயாவில் சற்றே பின்தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும். இந்நிலையில், 3 மாநில தேர்தல்- திரிபுரா, நாகலாந்தில் பாஜக முன்னிலை என தகவல் வெளியாகியுள்ளது.அதே நேரத்தில் மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக பின்தங்கியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த என்.பி.பி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

