மாணவர்களின் மனநிலை புரிந்து கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேச்சு.
கடைசி வரிசை மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப்பாருங்கள் தானாகவே முதல்வரிசைக்கு தன்னை அவர்கள் மாற்றிக்கொள்வார்கள் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் அவர் பேசும் போது .. மாணவர்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுப்பதை விட அவர்களுடைய மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் .இணைய தளங்களும் ,புதிய தொழில்நுட்பங்களும் மாணவர்களை ஈர்க்கின்றன.அந்த தொந்தரவுகளில் இருந்து அவர்கள் வெளியே வரவேண்டும் என்றார்.