• Fri. Apr 26th, 2024

பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும்.. ரவீந்திரநாத் எம்.பி பேட்டி

ByA.Tamilselvan

Sep 6, 2022

கூடிய விரைவில் வர இருக்கும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ரவீந்திரநாத் எம்.பி பேட்டியளித்துள்ளார். அதிமுக எம்.பி ரவீந்திரநாத், பழனி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் பாராட்டுக்குரியது. மேலும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *