• Fri. Apr 19th, 2024

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

ByA.Tamilselvan

Jul 27, 2022

சான்ரிதழ் சரிபார்ப்பு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 28-ம் தேதி நடத்தப்பட இருந்த இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மீன் வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணி துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் ஜூலை 28-ம் தேதி (நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் ஜூலை 28-ம் தேதி, 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. அதனால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய நாளில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 10 மணிக்கு நடத்தப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *