• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது..,

ByPrabhu Sekar

Nov 14, 2025

சென்னை மேற்குத் திசை தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற 39 வயது நபர், கிண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மூன்று நாட்களுக்கு முன்பு, வேலைக்குச் செல்லும் முன் தனது இருசக்கர வாகனத்தை தாம்பரம் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார். மீண்டும் திரும்பி வந்த போது, வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 43 வயதான சங்கர் என்பவர் வாகனத்தை திருடி சென்றது தென்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, மேலும் நான்கு இருசக்கர வாகனங்களை திருடியிருப்பது தெரியவந்தது. போலீசார் அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்து, சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.