நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர்.
தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய தலைப்புகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது “அரசியல் டுடே” இணையதளங்களில் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தியின் அடாவடி பற்றி செய்திகளாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டிருந்தோம். நமது அரசியல் டுடே இணையதள செய்தியைக் கண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கடந்த 29.03.25 அன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரச்னைக்குரிய இடமான சுகதேவ் தெருவில் ஆய்வு செய்தார். அப்போது அந்த தெருவில் பாதிவரை சிமென்ட் ரோடு போட்டு நிறுத்தியதும், தெருக்குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபர்தாஸ், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெர்ஸி ரோஸ்லின் அன்புராணி ஆகியோரை நேரில் வரவழைத்து, மக்களுக்காகத்தான் அரசாங்கம். நீங்க எல்லாம் அதிகாரிகள் என்ற போர்வையில யாருக்கு வேலை பார்க்கிறீங்க-? உங்கள மாதிரி ஆளுகளால கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்…மக்களுக்காக வேலை பாருங்க. இரண்டு தினங்களுக்குள்ள துண்டிக்கப்பட்ட பைப்பும் போட்டுருக்கனும். இந்தப் பகுதியில ரோடும் போட்டு முடிச்சிருக்கனும் என அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்றார். ஆனா எம்.பி தங்கதமிழ்ச்செல்வன், அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை சொல்லிச் சென்ற வேலை எதுவும் நடைபெறவில்லை என்று தேனி பழனிசெட்டிபட்டி யிலிருந்து நம் அலுவலகத்திற்கு அவலக்குரலாக தகவல் வர உடனே அங்கு ஆஜரானோம்.
தேனி எம்.பி யின் ஆய்வும், அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன் ..,
கண்ணதாசன்
“எம்.பி வந்து சம்மந்தப்பட்ட இடத்தை நேரில்பார்த்ததும், ஆஹா.. எம்பியே நேர்ல வந்து பாத்து சொல்லீட்டார்ல.. ரெண்டுநாள்ல ரோடும் வந்துரும், கட் பண்ணுன குழாயும் வந்துரும்னு சந்தோஷப்பட்டோம்.. ஆனா எதுவும் நடக்கல.எங்க ஊர் பொறுத்த அளவில் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வைத்தது தான் சட்டம். எம்.பி குழாய்க்கு கனெக்ஷன் குடுக்கச் சொன்னதால இப்ப அந்த குழாயை சேர்மன் உத்தரவில் பேரூராட்சி ஊழியர்கள் பிடுங்கி எடுத்துச் சென்று விட்டார்கள். எடுத்து செல்லுறப்ப கேட்டால் சேர்மன் உத்தரவு குழாயை எடுத்துட்டு மட்டும் வரச் சொன்னாரு …வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது! எதுவா இருந்தாலும் சேர்மன் கிட்ட கேட்டுக்கங்க என்று சொல்லிட்டு போயிட்டாங்க … உடனே சேர்மன் கிட்ட போய் கேட்ட.., “எம்பி கிட்ட சொல்லீட்டீங்கள்ல.. வேலை நடக்கும் போய்ட்டு வாங்க எல்லோரும் என மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்லிட்டாரு”. எங்க ஊரை பொறுத்தவரை இங்கு நானேராஜா, நானே மந்திரிங்கிறது சேர்மன் மிதுன் சக்கரவர்த்திதான். இவரை பகைத்துக்கொள்ள பயந்து அதிகாரிகளும் மௌனமாய் இருக்கிறார்கள். எம்பி என்ன? யார் வந்து சொன்னாலும் இவரை கேட்கப்போவதில்லை, இது எங்கள் தலையெழுத்து.. ஆண்டவரிடமும் சொல்லிவிட்டோம்… ஆள்பவர்களிடமும் சொல்லிவிட்டோம்…இனி இவர்களுக்கு எதிராக ஊரே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டியது தான் பாக்கி” என்றார் கண்ணதாசன் வேதனையாக .
செல்வராஜ்
மேலும் இது குறித்து பழனிச்செட்டிபட்டி திமுக பேரூர்செயலாளர் செல்வராஜ் இடம் கேட்ட போது..,
“சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செய்யும் அடாவடிகள் குறித்து கட்சி மேலிடத்திலும் தெரியப்படுத்தி உள்ளோம். தேனி கலெக்டர் கிட்டயும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்க அண்ணன் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் வந்து பிரச்சனைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு சென்றார்கள். பேரூராட்சியின் ஏடி, செயல் அலுவலர் போன்றவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் அவர்களை கோர்ட்டு, கேஸ் என இழுத்தடிப்பேன் என்று மிதுன் சக்கரவர்த்தி மிரட்டுவதால் அவர்கள் சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். பொதுமக்களுக்கு இவ்வளவு அக்கிரமங்கள், இடையூறுகள் செய்யும் மிதுன் சக்கரவர்த்தி அதிகாரத்தை தட்டி கேட்க நாதி இல்லை. அதிகாரிகளும், அலுவலர்களும் சேர்மனுக்கு பயத்தால சப்போர்ட்டாக இருக்கிறாங்க. இணைப்பு துண்டிக்கப்பட்ட தெருக் குழாய்க்கு இரண்டு நாளில் இணைப்பு வழங்க எங்க அண்ணன் எம்.பி உத்தரவிட்டு போன மறுநாளே, தெருக்குழாய் இருந்த அடையாளமே தெரியாமல் பிடுங்கி எடுத்துச் சென்றார்கள்.. இங்கு எம்.பி பேச்சுக்கு மரியாதை இல்லை.எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா.., நான் தா ராஜா என ஊருக்குள் எங்க கட்சிக்காரங்க கிட்டேயே பேசி வராரு மிதுன் சக்கரவர்த்தி.மேலும் 8வது வார்டுல குறிப்பிட்டு ஒரு தெருவே குறி வச்சு ஆக்கிரமிப்பு இருப்பதா உருவாக்குன புகார்தாரர் வேற யாருமில்லை சேர்மன் ஒட வலது கை மாமா இளையராஜா தான் இந்த கொடுமையை எங்க போய் சொல்ல ஊருகே தெரியும். நானே நொந்து போய் இருக்கிறேன்” என்றார் வேதனையாக.
இவர்களது குற்றச்சாட்டுகள் குறித்து தேனி பழனிசெட்டிபட்டியின் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டோம்.., நம் தொடர்பு தொடர்ந்து துண்டிக்கப்படவே
கிறிஸ்டோபர் தாஸ்
மேலும் இது குறித்து, தேனி மாவட்டத்தின் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ்யை தொடர்பு கொண்டு பேசினோம்..,
“பழனிசெட்டிபட்டி விவகாரம் எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.நான் சேர்மன் சொல்றத கேக்குறதா? எம்.பி சொல்றத கேக்குறதா?நான் லீவு போட்டு போக போறேன்” என்றார் படபடப்பாக.
இந்த பிரச்சனையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்து இது குறித்து தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்..,
தங்க தமிழ்ச்செல்வன்
“சம்பந்தப்பட்ட அந்த தெருவுக்கு நானே நேரில் சென்று பார்வையிட்டேன். தெருவில் அரைகுறையாக போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையையும், இணைப்பு துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்யையும் இரண்டு நாளில் சரி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரியிடம் சொல்லிவிட்டு வந்தேன், இன்னும் வேலை செய்து முடிக்கவில்லையா ? என்றவரிடம்,
நீங்கள் சொல்லிவிட்டு வந்த பின்பு தான் அந்த தெருக்குடிநீர்குழாய் இருக்கிற இடமே தெரியாமல் பிடுங்கிக் எடுத்து சென்று விட்டார்கள் என்றதும், என்ன குழாய் பிடுங்கி எடுத்து சென்று விட்டார்களா?
“இப்ப நான் ஏடி கிட்ட பேசுறேன் என்றவர், இதற்கு சரியான தீர்வு கிடைக்காமல் விடமாட்டேன், இந்த பிரச்சனையை நானே களத்தில் இறங்கி முடித்து வைக்கிறேன்” என்று தங்க தமிழ்ச்செல்வன் உத்வேகத்துடன் பேசினார்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
இந்த குறளை தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி படிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்து.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எல்.ஐ. சி கிளை சார்பாக 70 வது ஆண்டு இன்சூரன்ஸ் வார விழா நடைபெற்றது. சிவகாசி கிளை மேலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார், உதவி மேலாளர் ராஜேஷ் முன்னிலையில் தொழிலதிபர் ஏ.ஆர்.டி.ஜெயராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து காப்பீட்டு திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், 70 ஆண்டுகளாக இன்சூரன்ஸ் திட்டத்திற்கு ஆதரவு தரும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவகாசி காரனேசன் சந்திப்பிலிருந்து எல்ஐசி அலுவலகம் வரை… Read more: சிவகாசி எல்.ஐ. சி கிளை சார்பாக 70 வது ஆண்டு இன்சூரன்ஸ் வார விழா..,
தமிழக வெற்றிக் கழக ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது” என்றும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் . கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைச்சர்கள் தங்களது… Read more: கோவை எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மாணியமாக வழங்க உள்ளதாக நாளிதழில் விளம்பரம் வெளியானது., இதனை அறிந்த உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஆதரவற்ற பெண்கள் ஆயிரக்கணக்கானோர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது., இந்நிலையில் 18 முதல் 45 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே இந்த மாணியம் கிடைக்கும் என்றும், விதவை உதவி… Read more: ஆதரவற்ற பெண்களுக்கு மாணியமாக 50 ஆயிரம் வழங்க உள்ளதாக வெளியான தகவல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம் முதல் எழுமலை வரை உள்ள சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது., இந்த சாலை வழியாக காமாட்சிபுரம், சுப்புலாபுரம், ஆத்தங்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது., இப்பகுதி மக்கள் அவசர தேவைக்காகவும், மருத்துவமனைக்கும், பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது., மேலும் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்த… Read more: உசிலம்பட்டி அருகே பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர், வடுகபட்டி, பூதிப்புரம் பகுதிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019 – 20 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலணிகளை புதர் மற்றும் ஊரணி பகுதியில் குப்பை போல, வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உசிலம்பட்டியில் இயங்கி வரும் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வழங்கியது போக இருப்பு வைக்கப்பட்டிருந்த காலணிகளை… Read more: அரசு பள்ளி மாணவ மாணவிகளின் காலணிகள் புதரில் வீசப்பட்ட சம்பவம்..,
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சுற்றியுள்ள வலையபட்டி மற்றும் மஞ்சமலை அடிவார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாயத் தேவைகளுக்காகவும் பயிர் சாகுபடிக்காகவும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்தல் காலத்தின் போது தவெக அரசு அளித்த வாக்குறுதியின்படி, தங்களின் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று அரசின் கவனத்தை ஈர்க்கும்… Read more: பாலமேடு அருகே முழுமையான விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,
திண்டுக்கல், நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த FQL இன்வெஸ்ட்மெண்ட் என்ற தனியார் நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்தை 45 முதல் 65 நாட்களில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் இணையதளம் திடீரென முடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக காசம்பட்டி பகுதியில் முகவர்களாக செயல்பட்ட ரமேஷ், அவரது மனைவி அனிதா, உறவினர் விஜய் ஆகியோரின் வீடுகளை… Read more: FQL நிதி நிறுவன மோசடியின் காரணமாக நத்தம் இளைஞர் ராசு தற்கொலை செய்து கொண்டதாக கூறும் விவகாரம்..,
உசிலம்பட்டி நகர் லயன்ஸ் சங்கத்தின் 37 ஆவது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் மாவட்ட ஆளுநர்களான ஆர் கே தங்கராஜ், நந்தகுமார், கள்ளந்திரி முத்துராமலிங்கம், முருகேசன், அறிவழகன் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தலைவராக செல்வராஜ், செயலாளராக இனியன் மற்றும் பொருளாளராக அருண்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டனர். இவ்விழாவில் வி பெருமாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு 10 இருக்கையில் வழங்கப்பட்டன. கீழசம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய… Read more: உசிலம்பட்டி அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா..,
தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையம் நகர தமுமுக சார்பாக தமுமுகவின் 32 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு 1-9-2026 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணியளவில் உத்தமபாளையம் பைபாஸ் அருகில் நகர தலைவர் முகமது அசாருதீன் தலைமையில் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் முகமது ரபிக், தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மமக மாவட்டச் செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட பொருளாளர் ஹபிபுல்லா, மாவட்டத் துணைச் செயலாளர் ஹக்கீம்,… Read more: உத்தமபாளையத்தில் தமுமுகவின் 32 ஆம் ஆண்டு விழா!
சாத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பூலித்தேவர் 311 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 311 வது பிறந்தநாள் விழா விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தகல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக கொண்டாடி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை வைத்தார் மேலும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஜோதிநிவாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூலித்தேவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து… Read more: சாத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பூலித்தேவர் 311 வது பிறந்தநாள் விழா..,