நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர்.
தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய தலைப்புகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது “அரசியல் டுடே” இணையதளங்களில் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தியின் அடாவடி பற்றி செய்திகளாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டிருந்தோம். நமது அரசியல் டுடே இணையதள செய்தியைக் கண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கடந்த 29.03.25 அன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரச்னைக்குரிய இடமான சுகதேவ் தெருவில் ஆய்வு செய்தார். அப்போது அந்த தெருவில் பாதிவரை சிமென்ட் ரோடு போட்டு நிறுத்தியதும், தெருக்குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபர்தாஸ், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெர்ஸி ரோஸ்லின் அன்புராணி ஆகியோரை நேரில் வரவழைத்து, மக்களுக்காகத்தான் அரசாங்கம். நீங்க எல்லாம் அதிகாரிகள் என்ற போர்வையில யாருக்கு வேலை பார்க்கிறீங்க-? உங்கள மாதிரி ஆளுகளால கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்…மக்களுக்காக வேலை பாருங்க. இரண்டு தினங்களுக்குள்ள துண்டிக்கப்பட்ட பைப்பும் போட்டுருக்கனும். இந்தப் பகுதியில ரோடும் போட்டு முடிச்சிருக்கனும் என அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்றார். ஆனா எம்.பி தங்கதமிழ்ச்செல்வன், அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை சொல்லிச் சென்ற வேலை எதுவும் நடைபெறவில்லை என்று தேனி பழனிசெட்டிபட்டி யிலிருந்து நம் அலுவலகத்திற்கு அவலக்குரலாக தகவல் வர உடனே அங்கு ஆஜரானோம்.
தேனி எம்.பி யின் ஆய்வும், அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன் ..,
கண்ணதாசன்
“எம்.பி வந்து சம்மந்தப்பட்ட இடத்தை நேரில்பார்த்ததும், ஆஹா.. எம்பியே நேர்ல வந்து பாத்து சொல்லீட்டார்ல.. ரெண்டுநாள்ல ரோடும் வந்துரும், கட் பண்ணுன குழாயும் வந்துரும்னு சந்தோஷப்பட்டோம்.. ஆனா எதுவும் நடக்கல.எங்க ஊர் பொறுத்த அளவில் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வைத்தது தான் சட்டம். எம்.பி குழாய்க்கு கனெக்ஷன் குடுக்கச் சொன்னதால இப்ப அந்த குழாயை சேர்மன் உத்தரவில் பேரூராட்சி ஊழியர்கள் பிடுங்கி எடுத்துச் சென்று விட்டார்கள். எடுத்து செல்லுறப்ப கேட்டால் சேர்மன் உத்தரவு குழாயை எடுத்துட்டு மட்டும் வரச் சொன்னாரு …வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது! எதுவா இருந்தாலும் சேர்மன் கிட்ட கேட்டுக்கங்க என்று சொல்லிட்டு போயிட்டாங்க … உடனே சேர்மன் கிட்ட போய் கேட்ட.., “எம்பி கிட்ட சொல்லீட்டீங்கள்ல.. வேலை நடக்கும் போய்ட்டு வாங்க எல்லோரும் என மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்லிட்டாரு”. எங்க ஊரை பொறுத்தவரை இங்கு நானேராஜா, நானே மந்திரிங்கிறது சேர்மன் மிதுன் சக்கரவர்த்திதான். இவரை பகைத்துக்கொள்ள பயந்து அதிகாரிகளும் மௌனமாய் இருக்கிறார்கள். எம்பி என்ன? யார் வந்து சொன்னாலும் இவரை கேட்கப்போவதில்லை, இது எங்கள் தலையெழுத்து.. ஆண்டவரிடமும் சொல்லிவிட்டோம்… ஆள்பவர்களிடமும் சொல்லிவிட்டோம்…இனி இவர்களுக்கு எதிராக ஊரே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டியது தான் பாக்கி” என்றார் கண்ணதாசன் வேதனையாக .
செல்வராஜ்
மேலும் இது குறித்து பழனிச்செட்டிபட்டி திமுக பேரூர்செயலாளர் செல்வராஜ் இடம் கேட்ட போது..,
“சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செய்யும் அடாவடிகள் குறித்து கட்சி மேலிடத்திலும் தெரியப்படுத்தி உள்ளோம். தேனி கலெக்டர் கிட்டயும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்க அண்ணன் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் வந்து பிரச்சனைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு சென்றார்கள். பேரூராட்சியின் ஏடி, செயல் அலுவலர் போன்றவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் அவர்களை கோர்ட்டு, கேஸ் என இழுத்தடிப்பேன் என்று மிதுன் சக்கரவர்த்தி மிரட்டுவதால் அவர்கள் சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். பொதுமக்களுக்கு இவ்வளவு அக்கிரமங்கள், இடையூறுகள் செய்யும் மிதுன் சக்கரவர்த்தி அதிகாரத்தை தட்டி கேட்க நாதி இல்லை. அதிகாரிகளும், அலுவலர்களும் சேர்மனுக்கு பயத்தால சப்போர்ட்டாக இருக்கிறாங்க. இணைப்பு துண்டிக்கப்பட்ட தெருக் குழாய்க்கு இரண்டு நாளில் இணைப்பு வழங்க எங்க அண்ணன் எம்.பி உத்தரவிட்டு போன மறுநாளே, தெருக்குழாய் இருந்த அடையாளமே தெரியாமல் பிடுங்கி எடுத்துச் சென்றார்கள்.. இங்கு எம்.பி பேச்சுக்கு மரியாதை இல்லை.எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா.., நான் தா ராஜா என ஊருக்குள் எங்க கட்சிக்காரங்க கிட்டேயே பேசி வராரு மிதுன் சக்கரவர்த்தி.மேலும் 8வது வார்டுல குறிப்பிட்டு ஒரு தெருவே குறி வச்சு ஆக்கிரமிப்பு இருப்பதா உருவாக்குன புகார்தாரர் வேற யாருமில்லை சேர்மன் ஒட வலது கை மாமா இளையராஜா தான் இந்த கொடுமையை எங்க போய் சொல்ல ஊருகே தெரியும். நானே நொந்து போய் இருக்கிறேன்” என்றார் வேதனையாக.
இவர்களது குற்றச்சாட்டுகள் குறித்து தேனி பழனிசெட்டிபட்டியின் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டோம்.., நம் தொடர்பு தொடர்ந்து துண்டிக்கப்படவே
கிறிஸ்டோபர் தாஸ்
மேலும் இது குறித்து, தேனி மாவட்டத்தின் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ்யை தொடர்பு கொண்டு பேசினோம்..,
“பழனிசெட்டிபட்டி விவகாரம் எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.நான் சேர்மன் சொல்றத கேக்குறதா? எம்.பி சொல்றத கேக்குறதா?நான் லீவு போட்டு போக போறேன்” என்றார் படபடப்பாக.
இந்த பிரச்சனையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்து இது குறித்து தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்..,
தங்க தமிழ்ச்செல்வன்
“சம்பந்தப்பட்ட அந்த தெருவுக்கு நானே நேரில் சென்று பார்வையிட்டேன். தெருவில் அரைகுறையாக போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையையும், இணைப்பு துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்யையும் இரண்டு நாளில் சரி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரியிடம் சொல்லிவிட்டு வந்தேன், இன்னும் வேலை செய்து முடிக்கவில்லையா ? என்றவரிடம்,
நீங்கள் சொல்லிவிட்டு வந்த பின்பு தான் அந்த தெருக்குடிநீர்குழாய் இருக்கிற இடமே தெரியாமல் பிடுங்கிக் எடுத்து சென்று விட்டார்கள் என்றதும், என்ன குழாய் பிடுங்கி எடுத்து சென்று விட்டார்களா?
“இப்ப நான் ஏடி கிட்ட பேசுறேன் என்றவர், இதற்கு சரியான தீர்வு கிடைக்காமல் விடமாட்டேன், இந்த பிரச்சனையை நானே களத்தில் இறங்கி முடித்து வைக்கிறேன்” என்று தங்க தமிழ்ச்செல்வன் உத்வேகத்துடன் பேசினார்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
இந்த குறளை தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி படிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்து.
கோவை பிரஸ் கிளப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் அறிக்கையை 10 பிரிவுகள் கொண்ட 50 விரிவான தேர்தல் வாக்குறுதிகளை கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர், பிரியா கிருஷ்ணா MLA, R.L கண்ணன், கோவை சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி மற்றும் கோவை மற்றும் திருப்பூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் கூறியதாவது காங்கிரஸ் கட்சி சார்பில்… Read more: கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் செய்தியாளர்கள் சந்திப்பு..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலையபட்டி, நல்லுத்தேவன்பட்டி, லிங்கநாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் பொதுமக்களிடம் தென்னந்தோப்பு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்., இதில் கிராம பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்., இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் மீண்டும் உசிலம்பட்டி தொகுதிக்கு… Read more: தென்னந்தோப்பு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அய்யப்பன்..,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் ,வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கனவாய் பகுதி அருகில் உசிலம்பட்டி நிலையான கண்காணிப்பு குழு செல்வமீனாட்சி தலைமையில் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தேனியில் இருந்து வந்த சீகுள் குளோபல் பிரீசியல் லாஜிஸ்டிக்ஸ்… Read more: ரூ.10 கோடி மதிப்பிலான நகைகள் கொண்டு சென்ற வாகனத்தில் சோதனை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தங்கப்பாண்டியனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்புதன்கிழமை மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இராஜபாளையம் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை ஆதரித்து பேசியதாவது; அரசினுடைய திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துக் கொண்டு போய் சேருங்கள். மகளிருக்கு கட்டமில்லா பேருந்து, மகளிர் மாதம் ரூ.900 சேமிக்கின்றனர். பள்ளியில் காலை உணவு திட்டம், கல்லூரிகளில் 14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பல பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறோம்,… Read more: திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் போட்டியிடும் த. புஷ்பராஜ் என்பவருக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக புதுக்கோட்டை அடுத்த ஆலங்குடி வடகாடு முக்கம் என்ற இடத்திற்கு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வி.கே.சசிகலா வந்து வாக்குகள் சேகரித்தார். அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்களுடன் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில்… Read more: திமுக மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை- சசிகலா பேச்சு..,
திண்டுக்கல் பாரதிபுரதில் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் நெசவாளர் வீட்டிற்கு சென்று தறி நெய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை சொல்லியும், தனக்கு வாக்களித்தால் திண்டுக்கல் தொகுதிக்கு செய்யும் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். இன்று பாரதிபுரம் சென்ற வேட்பாளர் செந்தில்குமார் அங்குள்ள நெசவாளர்கள் மத்தியில் ஓட்டு சேகரிக்கும்போது,… Read more: உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த ஐ.பி.செந்தில்குமார்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுமார் 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று அவர் ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலைகள் அணிவித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சடையம்பட்டியில் பிரசாரம் தொடங்கி, சத்திரப் பட்டி ஒ.மேட்டுப்பட்டி ஒத்தையால் நாரணாபுரம் இந்திராகாலனி, மேலப்புதூர் பி.லட்சுமியாபுரம், பந்துவார் பட்டி நடுச்சூரங்குடி உள்ளிட்ட… Read more: சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த பெண்ணுக்கு அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் முதலுதவி சிகிச்சை அளித்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கிராமம் கிராமமாக சென்று பொது மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குச் சேர்த்து வருகிறார். இந்நிலையில் வேடசந்தூர் ஒன்றியம் தட்டாரப்பட்டி ஊராட்சி மூப்பனார் நகரில் இன்று அவர் தனது பிரச்சார வாகனத்தில் இருந்து மைக் மூலம் பேசி பிரச்சாரத்தில்… Read more: பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம்..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.நாகஜோதிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மைக்மேல்பாளையம், நிலக்கோட்டை, மட்டப்பாறை, சக்கையநாயக்கனூர் ஆகிய பகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். மட்டப்பாறைக்கு வந்தபோது கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசிய போது கூறியதாவது: கடந்த 5… Read more: மு.க.ஸ்டாலின் தான் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் -ஐ.பெரியசாமி..,
விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுப் பேன் என பிரசாரத்தின் போது திருச்சுழி அ. தி.மு.க. வேட்பாளர் எம். எஸ்.ஆர்.ராஜவர்மன் தெரிவித்தார். திருச்சுழி சட்டமன்ற தொகுதி நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள கமலிபுளியங்குளம். முக்குளம், வீரக்குடி, , வள்ளக்குளம், மானூர், மறையூர், சேதுராயனேந்தல், மாகவேரி, முள்ளிக் கனரி, கிழவிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அ. தி.மு.க வேட்பாளர் எம்.எஸ். ஆர்.ராஜவர்மன் வீடுவீடாக சென்று இரட்டை இலை சின் னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் எம்.எஸ்.ஆர். ராஜவர்… Read more: அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தேர்தல் பிரச்சாரம்..,