• Sat. May 17th, 2025

பாம்பை அடிக்காமல் புதருக்குள் அனுப்பிய இளைஞர்கள்..,

ByKalamegam Viswanathan

May 2, 2025

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் அதற்கு மாறாக மதுரையில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. மதுரை அழகப்பன் நகர் பாரதியார் தெருவில் தனியார் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சாலையில் நல்ல பாம்பு ஒன்று மிகப் பெரிய தவளை ஒன்று கவ்வி கொண்டு சாலையில் படுத்து கொண்டிருந்தது.

அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் பெண்மணி ஒருவர் வாகனத்தை நிறுத்தினார். இதை கவனித்த அங்கு பணியாற்றும் மேலாளர் மற்றும் பணியாளர் இளைஞர்கள் இருவரும் நீங்கள் ஒன்னும் செய்யாது என நாய் தான் நிற்கிறது என்று நாங்கள் சொன்னோம் இல்லை பாம்பு என்று சொன்னவுடன் பாம்பா என்று வெளியே வந்து பார்த்தவுடன் ஒரு நல்ல பாம்பு மிகப்பெரிய தவளை ஒன்றை தவிக்கொண்டு இருந்தது.

உடனே அங்கு கூடிய பொதுமக்கள் உடனடியாக பாம்பை அடியுங்கள் என கூறினார்கள். எனினும் வினோத் மற்றும் காளமேகம் பாம்பை நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் அடிக்க மாட்டோம் என உறுதியாக பொதுமக்களிடம் கூறி விட்டார்கள். பொதுமக்கள் சொல்லவே ஒன்னும் பயப்பட வேண்டாம் நாம் ஏதேனும் செய்து விடுவோம் என பயத்தில்தான் அது அங்க இங்கும் செல்கிறது.

நாங்கள் பத்திரமாக அதை அடர்ந்த புதர் பகுதிக்குள் அனுப்பி வைக்கிறோம் என சொல்லி மெதுவாக அதை தட்டி விட்டு அடர்ந்த முற்பகுதிக்குள் அந்த பாம்பை பத்திரமாக அனுப்பி வைத்தனர். பாம்பு விவசாயிகளின் நண்பர் எனவும் இதை அடிப்பது மிகவும் பாவசெயல் ஆகும் என அப்பகுதி மக்களிடம் அவர்கள் தெரிவித்தனர். தயவு செய்து பம்பை கண்டால் எக்காரணத்தைக் கொண்டும் அடிக்காதீர்கள் அதுவும் ஒரு ஜீவன் தான் பாம்பை அடிக்காமல் சென்ற இளைஞர்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.