• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அணையில் வீசப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்..பொதுமக்கள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால் அண்ணா நகர் சுருக்கு பாலம் பகுதியில் ரேஷன் அரிசிகளை சிறிய சிறிய மூட்டைகளாக 150 க்கும் மேற்பட்ட மூட்டைகளை அணையில் வீசி சென்று இருப்பதால் அதிர்ச்சி.
நீலகிரி மாவட்டம் எமரால் செவ்வாய்க்கிழமை அன்று எமரால்டு சுருக்கு பாலம் அணைக்கு மாடு மேய்ப்பதற்காக சென்றவர் அணையில் சில மூட்டைகள் கிடப்பதை கண்டு காவல்துறைக்கு கிராம ஆய்வாளருக்கும் தகவல் தெரிவித்தனர். அணையில் 150 க்கும் மேற்பட்ட சிறிய சிறிய மூட்டைகளாக ரேஷன் அரிசிகள் வீசி சென்றுள்ளனர்.

அதிக அளவில் நீர் இருந்த பொழுது அணையில் வீசி செல்லப்பட்டுள்ள ரேஷன் அரிசி தற்போது தண்ணீர் குறைந்து காணப்படுவதால் மூட்டைகள் தெளிவாக தெரிந்து வருகின்றன. இதில் ஒரு மூட்டையை எடுத்து பிரித்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பதும் தெரிய வந்தது யார் ரேஷன் அரிசி மூட்டைகளாக அணையில் வீசி சென்றுள்ளார் என்பதைவிசாரித்து வருகின்றனர்