தனது திரை வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் நடிகர் விஜய் மிகவும் முக்கியமானவர் என்று பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.2000-ம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு 2002-ம் ஆண்டு அப்துல்மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.
பின்பு இந்தி படங்களில் அறிமுகமாகி, ஹாலிவுட் படங்கள், வெப் தொடர்கள் என நடித்து தற்போது சர்வதேச அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் பிரியங்கா சோப்ரா.சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், அப்பேட்டியில் நடிகர் விஜய் குறித்து பிரியங்கா சோப்ரா பேசியுள்ளார். அதில் அவர், ”முதன்முதலில் நான் நடித்த சில படங்களில் தமிழ்ப் படமான ‘தமிழன்’ மற்றும் ‘அண்டாஸ்’, ‘தி ஹீரோ’ ஆகிய இரு இந்திப் படங்களும் அடங்கும்.
அன்றைய காலகட்டத்தில் அவை பெரிய படங்கள். நடிப்பு என்பது நாம் அணியும் ஆடைகளும் மேக்கப்பும் மட்டுமே என்ற எண்ணத்தோடு படப்பிடிப்புத் தளத்துக்குள் நடந்து சென்றது எனக்கு நினைவிருக்கிறது.எனக்கு தமிழ் மொழி தெரியாததால் ‘தமிழன்’ திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. நான் வசனங்களைக் கேட்டு, அவற்றை மனப்பாடம் செய்து, அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதன் பிறகுதான் என்னுடைய வரிகளை பேசுவேன். ஆனால், என்னுடைய சக நடிகர் விஜய் நடிப்பதை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும்.
என்னுடைய திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிலரில் அவரும் ஒருவர்.விஜய் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் பணிவுடன் இருப்பார். ஒருமுறை படப்பிடிப்புத் தளத்துக்குள் வந்துவிட்டால் அதன் பிறகு வெளியே செல்லவே மாட்டார். அதை இப்போதும் நான் கடைபிடித்து வருகிறேன். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் என்றால் மட்டுமே தவிர மிகவும் அரிதாகத்தான் என்னுடைய கேரவனுக்கு திரும்பி செல்வேன் எனக் கூறியுள்ளார்.
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]
- மதுரை மல்லிகையின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்..,
7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இயக்கம்..!மதுரை மல்லிகைப்பூவின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் உருவாக்கப்படும் […] - படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா?” அனைத்து மாணவர்களும் கோரஸாக, […]
- கடையநல்லூர் அருகே பாழடைந்த கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலைதென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் பராமரிப்பு பணியின் போது ஐம்பொன்சிலையும், ஒரு […]