தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் நுழைந்துவிட்டது.
சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கொரோனவின் தாய்வீடான சீனாவிலும் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டில் இருந்து வடக்கு சீனாவின் டியான்ஜின் பகுதிக்கு வந்த நபர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அந்நாட்டு தெரிவித்துள்ளது.