பேரழகி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கிளியோபாட்ரா என்ற சாதூர்யமான பெண் தான். கிளியோபாட்ராவின் அழகை பார்த்து பல பேர் மயக்கம் கொண்டது உண்டு.அவ்வகையில் ரோமானிய ராஜியத்தின் உயர் பதவியில் இருந்த சீசரும் அதில் ஒருவர்.
பெண்கள் என்றாலே அழகுதான். அதனால்தான் நம் முன்னோர்கள் பண்டைகால முதல் செவ்விதழ், மலர்கொடி, வெண்ணிலா என வெள்ளை சிவப்பாக இருப்பதுதான் அழகு என்று கூறி பாடி சென்று விட்டனர். எகிப்திய அழகி கிளியோபாட்ராவை யாரும் அறியாதவர்களே இருக்க முடியாதது. ஆனால் ஆங்கிலப்படத்தில் திரையிடுவது போல் கிளியோபாட்ரா வெள்ளை நிறம் கொண்டவள் அல்ல. ஆமாம் எகிப்திய அழகியான கிளியோபாட்ரா கருப்பு பேரழகி. அவளின் அழகில் மயங்கி சேக்ஸ்பியரின் நாயகன் சூலியர் சீசர் ஒரு பிரமாண்டமான அறையைக் கட்டினான். அவளது கட்டழகும், கவர்ச்சியும், கண்டு மயங்காத ஆண்களே கிடையாது என்று பல வரலாற்று சம்பவங்கள் கூறுகின்றன.
கிளியோபாட்ரா முதலில் எகிப்திய நாட்டை சேர்ந்தவள் அல்ல. ஒரு கிரேக்க வம்சத்தின் பிள்ளை. பேரும் புகழும் குவியும் இடத்தில் தான் உண்மைகளும் கருப்பு பக்கங்களும் மறைக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் எகிப்திய அழகி கிளியோபாட்ரா பற்றிய சில அறிய தகவல்கள் உங்கள் முன். உண்மையான கிளியோபாட்ரா, சரித்திரங்களில் புகழப்படும் கிளியோபாட்ரா, கிளியோபாட்ரா 7 ஆவாள். வரலாற்றில் இவளுக்கு முன்பு 6 கிளியோபாட்ராகள் இருக்கின்றனர். சீசரும், மார்க் அந்தோனியும் கிளியோபாட்ராவுடன் உறவில் இருந்ததற்கு நிறைய காரணங்கள் இருந்திருகின்றன. ஆனால் முதன்மை காரணமாக கருதப்பட்டது அரசியல் பின்புலம்தான். அதுவும் ரோமபுரி மற்றும் எகிப்து நாடுகளுக்கு மத்தியிலான அரசியல் உறவுதான் காரணம் என்று கூறபடுகிறது.
கிளியோபாட்ரா ஒரு எழுத்தாளரும் கூட. காஸ்மெடிக் என்னும் மருந்து ஆய்வகப் புத்தகத்தை கிளியோபாட்ரா எழுதியாதாக கூறப்படுகிறது. கிளியோபாட்ராவுக்கு முன்பு அந்த நாட்டை ஆண்டுவந்த அவளது இரு சகோதரர்களை அடுத்தடுத்து கொன்றுவிட்டு எகிப்த்து சாம்ராஜ்யத்தின் அரசியாக கிளியோபாட்ரா வலம் வந்தால். கிளியோபாட்ரா தன் உடன் பிறந்த சகோதரனேயே திருமணம் செய்து கொண்டதாக சில வரலாற்று கூறுகள் கூறுகிறது. ஆனால் நிறைய கிளியோபாட்ரா பற்றிய வரலாறுகளின் குவியலில் அது எந்த கிளியோபாட்ரா என்று குழப்பம்தான் நிலவுகிறது.
ரோமாபுரி நாட்டிற்கும் கிளியோபாட்ராவிற்கும் பல சம்மந்தங்கள் உண்டு.ரோமானிய நாட்டின் உச்சமாக இருந்த சீசர் கிளியோபாட்ரா மீது கொண்ட காதலால் அவளுடன் சேர்ந்து வாழ துவங்கினார்.இதனால் எகிப்திலியே அவர் இருந்துவிட்டதால், ரோமானிய நாட்டை கண்டுக்கொள்ளாததுக்கும் பல அரசியல் காரணங்களுக்காகவும் சீசர் கொலைசெய்யப்பட்டார்.அவர் கொலை செய்யப்பட்டபோது கிளியோபாட்ரா ரோமாபுரியில் தான் இருந்துள்ளார்.எகிப்திய அழகி, எகிப்திய நாட்டை ஆண்டவள் என்று கூறப்படும் கிளியோபாட்ரா உண்மையில் கிரேக்க நாட்டை சேர்ந்தவள் என்று சில வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவளுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அதில் ஒரு இரட்டையர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அந்த நால்வரில் ஒருவரை தவிர மற்ற மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும் கூறபடுகிறது. வெற்றிகரமாக தனது ராஜாங்கத்தை நகர்த்தினார். கிளியோபாட்ரா சீசருடனும், சீசர் இறந்த உடன் அவரின் படைத் தளபதியான மார்க் அந்தோணியுடனும் உறவுவில் இருந்தாலும் தனது ராஜியத்தில் பெரிதாக்குவதில் சிறிதும் கோட்டை விடவில்லை. ஒரு பெண்ணாக இருந்தாலும். அரசியலில் மிக நேர்த்தியாக வென்றவள் கிளியோபாட்ரா.பல அறிக்கூர்ந்த விஷயங்களை நொடியில் சாதிப்பார்.
ஆனால் அந்த பேரழகிக்கும் விதி தன் விளையாட்டை காண்பித்துவிட்டது. கிளியோபாட்ரா தன்னை தானே அழித்துக்கொண்டாதாக வரலாற்றில் உள்ளது.அதுவும் பாம்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது. ஆயினும் கிளியோபாட்ரா வாழ்ந்த காலத்தில் இது போன்ற மரணங்கள் ஏற்பட்டதாக கூற்றுகள் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். ஒருவேளை ஊசி மூலமாக விஷத்தை உடலில் செலுத்தி பாம்பு கடித்ததாக மாற்றி இருக்கலாம் அல்லது மக்களை அவ்வாறு நம்ப வைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எது எப்படியானாலும், அறிவு மிகுந்த எகிப்த்தின் சாம்ராஜியத்தை ஆண்ட கிளியோபாட்ரா வரலாற்றில் எப்போதும் பேசுப்பொருளாகவே இருந்து வருகிறார்.எத்தனை பேரழகிகள் வந்தாலும் இந்த எகிப்திய பேரழகி தான் நினைவில் நின்றுள்ளார்.
- தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத ஒன்று… மோடி ட்விட்…தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று […]
- லடாக் வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலிலாடக் பகுதியில் நிகழ்ந்த வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் சென்று வாகனம் சிக்கி 7பேர் பலியாகியுள்ளனர்.லடாக்கின் துர்துக் […]
- 4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்புஉலக முழுவதும் கொரோனா தொற்று ஏற்றம் இறக்கம்த்தோடு காண்ப்படுகிறது. இந்தியாவில் 2000க்குள் இருந்த தொற்று எண்ணிக்கை […]
- நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..வெயில்இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் நாளையுடன் முடிவுக்குவருகிறது. தமிழகத்தில், கோடையின் உச்சகட்ட வெயிலான அக்னி நட்சத்திரம் […]
- போதைப்பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் விடுவிப்பு..!பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.தற்போது போதிய ஆதாரம் […]
- ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்லஇருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் அப்படி ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 […]
- மீண்டும் பிகில் ராயப்பன் என்ட்ரியா..?? அட்லி சொன்ன பதில்..தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு […]
- பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்… ஷாருக்கான், அஜய்தேவ்கனுக்கு கடிதம் எழுதிய ரசிகை..பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் […]
- லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச்… 10 முன்னனி நடிகைகள் அழைப்பு…லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே […]
- 10,12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை ரெடிஅரசு வேலை என்றாலே சந்தோசம் அதிலும் மத்திய அரசு வேலை என்றால் சொல்லவா வேண்டும்.. மத்திய […]
- பிளஸ்1 படிக்கும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைதமிழக்ததை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைகிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் […]
- புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடைஇளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு […]
- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]