பேரழகி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கிளியோபாட்ரா என்ற சாதூர்யமான பெண் தான். கிளியோபாட்ராவின் அழகை பார்த்து பல பேர் மயக்கம் கொண்டது உண்டு.அவ்வகையில் ரோமானிய ராஜியத்தின் உயர் பதவியில் இருந்த சீசரும் அதில் ஒருவர்.
பெண்கள் என்றாலே அழகுதான். அதனால்தான் நம் முன்னோர்கள் பண்டைகால முதல் செவ்விதழ், மலர்கொடி, வெண்ணிலா என வெள்ளை சிவப்பாக இருப்பதுதான் அழகு என்று கூறி பாடி சென்று விட்டனர். எகிப்திய அழகி கிளியோபாட்ராவை யாரும் அறியாதவர்களே இருக்க முடியாதது. ஆனால் ஆங்கிலப்படத்தில் திரையிடுவது போல் கிளியோபாட்ரா வெள்ளை நிறம் கொண்டவள் அல்ல. ஆமாம் எகிப்திய அழகியான கிளியோபாட்ரா கருப்பு பேரழகி. அவளின் அழகில் மயங்கி சேக்ஸ்பியரின் நாயகன் சூலியர் சீசர் ஒரு பிரமாண்டமான அறையைக் கட்டினான். அவளது கட்டழகும், கவர்ச்சியும், கண்டு மயங்காத ஆண்களே கிடையாது என்று பல வரலாற்று சம்பவங்கள் கூறுகின்றன.
கிளியோபாட்ரா முதலில் எகிப்திய நாட்டை சேர்ந்தவள் அல்ல. ஒரு கிரேக்க வம்சத்தின் பிள்ளை. பேரும் புகழும் குவியும் இடத்தில் தான் உண்மைகளும் கருப்பு பக்கங்களும் மறைக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் எகிப்திய அழகி கிளியோபாட்ரா பற்றிய சில அறிய தகவல்கள் உங்கள் முன். உண்மையான கிளியோபாட்ரா, சரித்திரங்களில் புகழப்படும் கிளியோபாட்ரா, கிளியோபாட்ரா 7 ஆவாள். வரலாற்றில் இவளுக்கு முன்பு 6 கிளியோபாட்ராகள் இருக்கின்றனர். சீசரும், மார்க் அந்தோனியும் கிளியோபாட்ராவுடன் உறவில் இருந்ததற்கு நிறைய காரணங்கள் இருந்திருகின்றன. ஆனால் முதன்மை காரணமாக கருதப்பட்டது அரசியல் பின்புலம்தான். அதுவும் ரோமபுரி மற்றும் எகிப்து நாடுகளுக்கு மத்தியிலான அரசியல் உறவுதான் காரணம் என்று கூறபடுகிறது.
கிளியோபாட்ரா ஒரு எழுத்தாளரும் கூட. காஸ்மெடிக் என்னும் மருந்து ஆய்வகப் புத்தகத்தை கிளியோபாட்ரா எழுதியாதாக கூறப்படுகிறது. கிளியோபாட்ராவுக்கு முன்பு அந்த நாட்டை ஆண்டுவந்த அவளது இரு சகோதரர்களை அடுத்தடுத்து கொன்றுவிட்டு எகிப்த்து சாம்ராஜ்யத்தின் அரசியாக கிளியோபாட்ரா வலம் வந்தால். கிளியோபாட்ரா தன் உடன் பிறந்த சகோதரனேயே திருமணம் செய்து கொண்டதாக சில வரலாற்று கூறுகள் கூறுகிறது. ஆனால் நிறைய கிளியோபாட்ரா பற்றிய வரலாறுகளின் குவியலில் அது எந்த கிளியோபாட்ரா என்று குழப்பம்தான் நிலவுகிறது.
ரோமாபுரி நாட்டிற்கும் கிளியோபாட்ராவிற்கும் பல சம்மந்தங்கள் உண்டு.ரோமானிய நாட்டின் உச்சமாக இருந்த சீசர் கிளியோபாட்ரா மீது கொண்ட காதலால் அவளுடன் சேர்ந்து வாழ துவங்கினார்.இதனால் எகிப்திலியே அவர் இருந்துவிட்டதால், ரோமானிய நாட்டை கண்டுக்கொள்ளாததுக்கும் பல அரசியல் காரணங்களுக்காகவும் சீசர் கொலைசெய்யப்பட்டார்.அவர் கொலை செய்யப்பட்டபோது கிளியோபாட்ரா ரோமாபுரியில் தான் இருந்துள்ளார்.எகிப்திய அழகி, எகிப்திய நாட்டை ஆண்டவள் என்று கூறப்படும் கிளியோபாட்ரா உண்மையில் கிரேக்க நாட்டை சேர்ந்தவள் என்று சில வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவளுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அதில் ஒரு இரட்டையர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அந்த நால்வரில் ஒருவரை தவிர மற்ற மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும் கூறபடுகிறது. வெற்றிகரமாக தனது ராஜாங்கத்தை நகர்த்தினார். கிளியோபாட்ரா சீசருடனும், சீசர் இறந்த உடன் அவரின் படைத் தளபதியான மார்க் அந்தோணியுடனும் உறவுவில் இருந்தாலும் தனது ராஜியத்தில் பெரிதாக்குவதில் சிறிதும் கோட்டை விடவில்லை. ஒரு பெண்ணாக இருந்தாலும். அரசியலில் மிக நேர்த்தியாக வென்றவள் கிளியோபாட்ரா.பல அறிக்கூர்ந்த விஷயங்களை நொடியில் சாதிப்பார்.
ஆனால் அந்த பேரழகிக்கும் விதி தன் விளையாட்டை காண்பித்துவிட்டது. கிளியோபாட்ரா தன்னை தானே அழித்துக்கொண்டாதாக வரலாற்றில் உள்ளது.அதுவும் பாம்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது. ஆயினும் கிளியோபாட்ரா வாழ்ந்த காலத்தில் இது போன்ற மரணங்கள் ஏற்பட்டதாக கூற்றுகள் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். ஒருவேளை ஊசி மூலமாக விஷத்தை உடலில் செலுத்தி பாம்பு கடித்ததாக மாற்றி இருக்கலாம் அல்லது மக்களை அவ்வாறு நம்ப வைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எது எப்படியானாலும், அறிவு மிகுந்த எகிப்த்தின் சாம்ராஜியத்தை ஆண்ட கிளியோபாட்ரா வரலாற்றில் எப்போதும் பேசுப்பொருளாகவே இருந்து வருகிறார்.எத்தனை பேரழகிகள் வந்தாலும் இந்த எகிப்திய பேரழகி தான் நினைவில் நின்றுள்ளார்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]