சென்னை கொளத்தூர் பகுதியினை சேர்ந்த பல்லவன் சாலையில் செயற்கை புல் தரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 86 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த மைதானம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திரு.வி.க.நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடலையும் முதல்வர் நேற்று(அக்.,20) திறந்து வைத்துள்ளார். மேலும் இந்த மைதானத்திற்கு கடந்தாண்டு மே மாதம் 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.