தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.
தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல் – உணவு – மற்ற உயிரினங்கள்- இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா! கற்பனை கதைகள் இல்லாத பண்பாட்டுப் பெருவிழா. வானம் கொடுத்தது; பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது நின்று வான்நோக்கி கரம் குவித்து உதயசூரியனை வணங்குவதன் மூலமாக உலகுக்கு நாம் உணர்த்துகிறோம் என்றார்.
புதுப்பானையில் புத்தரிசி போட்டுப் புத்தொளி ஊட்டி, அடுப்பு மூட்டிப் பானைக்கு மேலே வழிந்தோடும் அன்பு நுரையைப் போல நாடு முழுவதும் அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி பரவ வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்!
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள். அதனால்தான் இந்தத் தை மாதத்தைத் தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் மாதமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினம், இலக்கிய திருவிழா, கலைத் திருவிழா, நம்ம ஊர் திருவிழா, ஏறு தழுவுதல் என தமிழர் மாதமாகவே தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி மதப் பாகுபாடுகள் எவையும் இல்லாமல் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் சமத்துவப் பொதுவிழாவாகவே பொங்கல் விழா என்றும் திகழ வேண்டும். தாய்த்தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும். செங்கரும்பைப் போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும். என்று கூறி அனைவர்க்கும் எனது தைத்திருநாள் தமிழர் பெருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று கூறினார்.
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]