குமரி மாவட்டத்தில் பழமையானது மட்டும் அல்ல, புகழ் பெற்ற முக்கியமான கோவில்.
சுசீந்திரம் தெப்பக்குளத்தை தூர் வார ஒப்பந்தம் எடுத்த ஒப்பத்தகாரர். குளத்தின் மண்ணை வியாபாரம் நோக்கில் குளத்தின் அடிவரை தோண்டியதின் வினை குளத்தின் படித்துறை படி கற்கள், ஒருபகுதி சுவர் முழுவதும் இடிந்தது. இப்பகுதியில்
எதிர் கட்சிகள் மற்றும் ஆளூம் கட்சியினரும் ஒப்பந்தகாரரின் பேராசையின் அளவுக்கு எல்லை இல்லாது போனதே. தெப்பக்குளத்தின் இப்போதைய நிலைக்கு காரணம் கண்டனம் அனைத்து மக்களும் எழுப்பிய கேள்வி.?

ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீரு பூத்த நெருப்பாக இருக்கும் நிலையில்.
தெப்பக்குளத்தின் சுவர் பழமை மாறாமல்.தெப்பக்குளம் சீரமைப்பு பணிக்கு
ரூ.1.43 கோடிக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தின் ஒருபகுதி கருங்கல் சுவரை பழமை மாறாமல் மீண்டும் கட்டும் பணிக்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளி அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி படிவங்களை 13.01.2026 முதல் 27.01.2026 மாலை 5.45 மணி வரை https://intenders.gov.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். ஒப்பந்தப்புள்ளிகள் 28.01.2026 காலை 11 மணி வரை பெறப்பட்டு, அதே நாள் மாலை 4 மணிக்கு திறக்கப்படும்.
இந்த பணியின் மதிப்பீடு ரூ.1.43 கோடி. ஒப்பந்தத் தொகை ரூ.1,36,69,251; முன் வைப்பு தொகை ரூ.77,850. பணிக்காலம் 66 நாட்கள். தமிழ்நாடு அரசு துறைகள்/நிறுவனங்களில் பதிவு பெற்ற அனுபவமுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட எஸ்தபதிகள் பங்கேற்கலாம். ஒப்பந்தக்காரர் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





