• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க.-வின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்

Byமதி

Dec 1, 2021

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முடிவுகளும் விவதாங்களும் நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என அ.தி.மு.க. தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை செயற்குழு கூட்டம் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அ.தி.மு.க.-வின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சி தலைமை தெரிவித்துள்ளது.