• Fri. Apr 26th, 2024

ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

ByA.Tamilselvan

Dec 9, 2022

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் கடந்த மாதம் 24ம் தேதி (24/11/2022) விசாரணை தொடங்கியது. மொத்தம் 7 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ளது.ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக தமிழக அரசு 2017ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திற்க்கு எதிராக பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.இதனையடுத்து ஜல்லிக்கட்டு கலாச்சார உரிமையா? என்பதை முடிவு செய்ய 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது.இந்த விசாரணை இன்று நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *