• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

ஓசூர் அரசு பள்ளியில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்

ByA.Tamilselvan

Oct 14, 2022

விஷவாயு பரவியதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசுபள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜர் காலனியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அடுத்தடுத்து மாணவர்கள் மயங்கி விழுந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓசூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் விஷ வாயு பரவியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனை முன்பாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.