பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே பெண் ஆசிரியை மீது தாக்குதலில் ஈடுபட்ட மாணவிகள் மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்குச் செல்ல மறுத்த ஆசியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கோவிலூர் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 40 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2021-22ஆம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதி கட்டணம் தொடர்பாக இப்பள்ளி மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களில் ஒரு பிரிவினர் புதன்கிழமை வகுப்பு தொடங்கியதும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது 11ஆம் வகுப்புக்குள் நுழைந்த சில மாணவிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள வற்புறுத்தியதாக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்த பெண் ஆசிரியரை மாணவிகள் 5 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். போராட்டம் குறித்து தகவலறிந்த எரியோடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.இதனை தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர் மீதும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையிட்டனர்.
மேலும், மாணவிகள் மூலம் பாலியல் புகார் அளித்துவிடுவதாக ஆண் ஆசிரியர்களையும், உறவினர்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் அளித்துவிடுவதாகவும் உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் தொடர்ந்து மிரட்டுவதாக ஆசிரியர்கள் புகார் கொடுத்தனர். உடற்கல்வி ஆசிரியர்
முனியப்பனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர், எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கும்படி அறிவுறுத்தினார். அதன்பேரில், ஆசிரியர்கள் அனைவரும் தனித்தனியே புகார் மனு அளித்தனர். ஆனால், வியாழக்கிழமை காலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளிக்கு செல்ல மறுத்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பள்ளியின் தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றனர். இதனால் ஏதுவும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, போலீஸார் பள்ளிக்குச் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளிகளில் வகுப்புகள் எடுக்க ஆசிரியர் இல்லாமல் வகுப்புகள் பாதிக்கப்பட்டது. மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தலைமையாசிரியர் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து தேர்வுகளை நடத்தினார். இதனிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், முற்றுகையில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியரைத் தாக்கிய மாணவியை இடைநீக்கம் செய்வதாகவும், உடற்கல்வி ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததையடுத்து ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்றனர்.
- மதுரையில் மருத்துவ சங்கங்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆரம்ப […]
- திண்டுக்கல்லில் மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்!விடியா தி மு க ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை ஒரு […]
- திண்டுக்கல்லில் திமுக பஞ்சாயத்து தலைவர் பொதுமக்களால் விரட்டி அடிப்பு!திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் விடாமல் தனியார் கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்த […]
- பழனியில் தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான […]
- ரம்மி ஆப்புகளை தடை செய்யக்கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கைஇணையதளத்தில் உள்ள ஆன்லைன் ரம்மி ஆப்புகளை தமிழகஅரசு தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் […]
- விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வுகர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை […]
- எம்ஜிஆர் – ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் -ஓபிஎஸ்அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான […]
- மாநிலங்களவை இன்றுடன் நிறைவுமாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் […]
- பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் […]
- சமூக சேவகர் ஆர்.வி. மகேந்திரன் –க்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் …மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. […]
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்…சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக […]
- கருணாநிதியின் கொள்கைகளை அவரது பேரன் உதயநிதி கைவிட்டுவிட்டார் – அண்ணாமலைகருணாநிதி கொள்கையை கைவிட்ட அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை கிண்டல் டுவிட்டர்தமிழக பா.ஜனதா தலைவர் […]
- மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான நோய்… உரிமையாளர்கள் அதிர்ச்சி!ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகள் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை […]