தமிழ்நாட்டைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு 26 நாடுகளில் கிளைகளை ஆரம்பித்து ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றி வரும் சர்வதேச சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையினூடாக ஒரு புதிய சோழன் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கண்டி மாவட்டத்தின் கம்பளை பகுதியில் அமைந்திருக்கும் கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவனும் கிருஷ்ணபழனி மற்றும் இந்திராணி தம்பதிகளின் புதல்வனுமான 20 வயதான தர்சன் எனும் இளைஞர் ஒரு நொடியில் 7 கராத்தே குத்துகளை (ஜுதான் சுகி) செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்தார்.

இச் சோழன் உலக சாதனை நிகழ்விற்கு இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அனுராத ஜெயரத்ன முன்னிலை வகித்தார். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் முனைவர் யோகதாசன் ஜூட் நிமலன் மற்றும் கண்டி மாவட்ட தலைவர் பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரகுமார் உள்ளிட்டோர் நடுவர்களாக கலந்து கொண்டு உலக சாதனை படைத்த மாணவனுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

‘தென்ஷின்கான்’ கராத்தே பள்ளியின் தலைமை ஒருங்கிணப்பாளர் கராத்தேயில் 7th Dan பெற்ற சிகான் மனோஜ் உனன்தென்ன மற்றும் கராத்தேயின் 3rd Dan பெற்ற ஆசான் சந்திரமோகன் ஆகியோர் இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினர்.
இந் நிகழ்வை தமிழ்நாட்டின் தலைமையகத்தில் இருந்து காணொளி வாயிலாக கண்காணித்து, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் தலைமைச் செயற்குழுவின் வழக்கறிஞர் உயர்திரு கலைலிங்கம் மற்றும் தலைமைக் செயற் குழுவின் பொதுச் செயலாளர் திருமதி. ஆர்த்திகா நிமலன் ஆகியோர் உறுதி செய்தனர்
உலகில் அதிக கராத்தே குத்துக்களை செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்த கராத்தே மாணவன் தர்சனை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் 26 நாடுகளின் தலைவர்கள் மற்றும் இலங்கை வாழ் மக்களும் வாழ்த்திப் பாராட்டினார்கள்
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]