• Mon. Apr 21st, 2025

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இயந்திர கோளாறு காரணமாக புறப்பட தாமதம்

ByKalamegam Viswanathan

Jan 27, 2025

மதுரையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இயந்திர கோளாறு காரணமாக புறப்பட தாமதம். இரண்டு மணி நேரமாக பயணிகள் விமானத்துக்குள் அவதி..

மதுரை விமான நிலையத்திலிருந்து இலங்கை கொழும்புவிற்கு தினமும் விமானம் சென்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் 3:50 புறப்பட வேண்டிய விமானம் புறப்படவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக 183 பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே அவதி அடைந்து வருகின்றனர்.

இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பயணியிடம் தெரிவிக்கப்பட்டு எப்போது புறப்படும் என தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.