மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் சாலையில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோயிலில், ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள், அணுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டாபிஷேக ராமபிராமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். புஷ்பாபிஷேகம், மஹா ஆராதனை, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.

அதோடு மேற்காசிய நாட்டில் நடக்கும் போர் பதட்டம் குறைந்து நாட்டில் மக்கள் அமைதியாக வாழவும், தேர்தல் அமைதியாக நடந்து நல்லாட்சி அமையவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
நாட்டில் நல்லாசிக்கு உதாரணமாக இருந்தவர் தசரத சக்கரவர்த்தி யின் மகனாக அவதரித்தவர் ராமபிரான். ‘ஒரு வில்.. ஒரு இல்.. ஒரு சொல்..’ என்ற பதத்திற்கு உதாரணமாகிய ராம பிரான் அருளால், நாட்டில் வளங்கள் பெருக வேண்டி விசேஷ பூஜைகள், பிரார்த்தனைகள் நடைப்பெற்றது.




