

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூன்று ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

அவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதன் காரணமாக மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை அவசர, அவசரமாக வெட்டி எடுத்து கொண்டு கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தால் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் குறைந்த அளவிலான படகுகளில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். தற்போது அவர்களையும் இலங்கை கடற்படை விரட்டியத்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

