ராயவரம் சாலையில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாடு, பூஞ்சிட்டு மாடு என இரண்டு பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது.

மேலும் இந்த மாட்டு வண்டி பந்தயங்களில் புதுக்கோட்டை திருச்சி திண்டுக்கல் தேனி திருநெல்வேலி இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு 8 ஜோடிகளும், சிறிய மாடு 12 ஜோடிகள் என 20 மாட்டு வண்டிகள் பங்கேற்கின்றனர்
மேலும் சாலைகளில் துள்ளி குதித்து சீறி பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள் சரியான பாதையில் செல்ல சாரதிகள் மாடுகளுக்கு இணையாக ஓடியதையும் சாலைகளின் இரு புறங்களிலும் நின்ற ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மேலும் விமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பணம் முதல் பரிசு 30059. சிலம்பரசன் சேர்வை இரண்டாம் பரிசு 25059 கடியப்பட்டி முன்னாள் தலைவர் சோமசுந்தரம் உமா மகேஸ்வரி மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.