மன அழுத்தத்திற்கு வடிகால் ஆன்மீகம் என்று அனுஷ உற்சவ விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு.
மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் ‘அனுஷ உற்சவம்’ மதுரை எஸ்.எஸ்.காலனி, எம். ஆர்.பி., திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அனுஷத்தி ன் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஸ்ரீ மகா பெரியவா மகிமை என்ற தலைப்பில் பேசியதாவது. முக்காலத்தில் வாழ்க்கைக்கு ஆதாரம் என்று கேட்டால் பகவான் என்பார்கள். இன்று ஆதார் எண் என்கிறார்கள்.காலம் இன்று மாறியிருக்கிறது .வயது மூப்பு வரும்போது புரியாத கவலை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. வடிகால் ஆன்மீகம் இன்றைய மன அழுத்தத்திற்கு வடிகால் ஆன்மீகம். பெண்களை நாம் இரு கண்களாக பாவிக்க வேண்டும். பெண்களை கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்வது ஆண்களின் கடமை. பெண்களுக்கு வீட்டை பாதுகாக்க வேண்டிய கடமை முக்கியம் உண்டு. இதிலிருந்து பெண்கள் விலகும் போது சமூகம் சிதைந்து போகும் என்றும் சொல்கிறார் மகா பெரியவர். சமைக்கும்போது பெண்கள் கோபப்படக்கூடாது முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பசு இருந்தது வீடுகள் லட்சுமி கடாட்சமாக இருந்தது. மண்ணில் பிறந்த தாய் தன் குழந்தைகளுக்கு மட்டும் பால் கொடுக்கிறாள் பசு குறைந்தது ஆயிரம் குழந்தைகளுக்கு பால் கொடுக்கிறது தாயினும் சிறந்த தாய் பசு என்கிற மகா பெரியவர். ஒவ்வொருவரும் காலை நாலு மணி முதல் 6 மணிக்கு 7 கிரகங்கள் ஒன்றாக சேரும் நேரத்தில் ஜெபம் செய்தால் நாம் கேட்டது கிடைக்கும். எளிய வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தால் ஒவ்வொருவருக்கும் எந்த பிரச்சனையும் வராது. பிர்லாவும் மகா பெரியவரும் மகா பெரியவர் மாதிரி ஒரு சந்நியாசியை பார்க்க முடியாது தன்னையே ஒரு பவித்திரமாக வைத்திருந்தவர். தொழிலதிபர் பிர்லா ஒரு முறை மகா பெரியவரின் எளிமையை பார்த்து வியந்து போனார். மடத்தை பளிங்கு கற்களால் அழகாக கட்டுகிறேன் என்று கேட்டபோது அதை வேண்டாம் என்று தவிர்த்து விட்டார். வேத மந்திரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. வேதத்தில் முக்கியம் யாகம் அதிலும் தியாகம் வேண்டும். அமைதி அன்பு கருணை தவம் தானம் இவை செய்தால் வாழ்க்கை வளப்படும் என்கிறார் மகா பெரியவர். சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக முழுமையாக கடைப்பிடித்தவர் ஸ்ரீ மகா பெரியவர். குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை. நாம் குருவை சிக் கென பற்றிக் கொள்ள வேண்டும். மேலும் தெரியாமல் செய்த பாவத்தை போக்குவதற்கு ஒரு நாளைக்கு இரண்டு நல்லது செய்ய வேண்டும் இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]