• Sun. May 19th, 2024

சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீர் ரத்தனதால் பயணிகள் அவதி…

ByKalamegam Viswanathan

Sep 18, 2023

சென்னையில் இருந்து பகல் 11:30 மணியளவில் மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் மதுரை இருந்து செல்ல வேண்டிய பயணிகள் அவதி அடைந்தனர்.

மதுரையில் இருந்து சென்னை செல்ல 90 பேர் முன்பதிவு செய்து வைத்திருந்தனர்.

சென்னையிலிருந்து 11:30 மணிக்கு மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து 12.05 மணிக்கு மீண்டும் சென்னை செல்லும்.

விமானம் திடீரென ரத்தானதால் இதனை தொடர்ந்து பயணிகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

இதனை அடுத்து அவசரமாக செல்ல வேண்டிய பயணிகளுக்கு கார் மூலம் அனுப்பி வைத்தனர் .

மிகவும் அவசரமாக செல்லும் பயணிகளுக்கு இண்டிகோ விமானத்தில் சென்னை பயணம் செய்யவும். .

மீதமுள்ள 37 பயணிகளுக்கு சென்னை செல்வதற்காக அடுத்த விமானத்தில் தயார் செய்து வருகின்றனர்.

ஸ்பைஸ் ஜெட் விமானம் திடீரென ரத்தனதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாய்னர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *