• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Dec 26, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் மண்டல் பாஜக சார்பாக முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளையொட்டி அருள்மிகு சோழவந்தான் ஸ்ரீ ஜெனகைமாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார்.

சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பழனிவேல்சாமி பொறுப்பாளர் தங்கவேல்சாமி மாவட்ட துணைத் தலைவர் முருகேஸ்வரி மற்றும் உதயகுமார் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சமயநல்லூர் மண்டல் தலைவர் கணேசன் மகாலிங்கம் ரஞ்சித் கருப்புசாமி நாகு ஆசாரி கணேஷ் வழக்கறிஞர் முத்துமணி ரமேஷ் செந்தில் கேசவமூர்த்தி வெயில் முத்து கருப்பதேவர் விஜிபாண்டி ராம்பிரசாத் பேட்டை ரமா,சுபா, முருகேஸ்வரி உள்ளிட்ட பாஜக மாவட்ட மண்டல் நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர்.