• Thu. Apr 25th, 2024

தனியார் பள்ளிகளில் விடுமுறையிலும் சிறப்பு பாடம்..

Byகாயத்ரி

Oct 4, 2022

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்ததைய்டுத்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 13ஆம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரையும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இன்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில், தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேண்டுமானால் தேவைப்பட்டால் மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியோடு அரை நாள் மட்டும் சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அரசு இப்படி என்னதான் உத்தரவு போட்டாலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பண்டிகை விடுமுறை, தேர்வு விடுமுறை, வார விடுமுறை என எந்த விடுமுறையையும் கருத்தில் கொள்ளாமல் தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு தான் வருகிறது. மேலும் பொது தேர்வில் தங்களது பிள்ளைகள் அதிகம் மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி நிர்வாகத்தின் விடுமுறை தினசரி வகுப்புகளுக்கு மாணவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க தான் செய்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை யாரும் கருத்தில் கொள்வதில்லை என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *