திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் நடைபெற்றது.

மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அளிக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் இந்த சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.




