மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் சத்திய யுகத்தின் தலைநகர் ஸ்ரீ ராம ஜன்ம பூமி அயோத்தியில் ஸ்ரீ ராமன் பிராண பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ராம பக்த சபை தலைவர் மணியம் தலைமையில் கோவில் பூசாரி நல்லுப் பிள்ளை முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கிராம பொதுமக்களும் ஆன்மீக அன்பர்களும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ராமபிரானின் அருளையும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரின் அருளையும் பெற்றுச் சென்றனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனூர் ஸ்ரீ ராம பக்த சபை குழுவினர் செய்திருந்தனர் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.