

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க கோரிய தமிழக அரசின் மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் அளித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும் வரை, மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை தொடங்கியதும், மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு தீர்வு காண இயலவில்லை என தெரிவித்தார். கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மோகன் காத்தர்கி, தமிழக அரசின் மனுவில் தீர்ப்பாயத்தை அமைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என வாதிட்டார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு இரு மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, மேலும் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வாதிட்டார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் வி.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு இரு முறை கூடியது. 2020-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி கூடியது. 2020-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு கூடவில்லை. தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைப்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதற்கு கர்நாடக அரசு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு தீர்வு காண இயலவில்லை. இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்க முடிவு செய்துள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க கோரிய தமிழக அரசின் மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கிறோம். வழக்கு விசாரணையை டிசம்பர் 14-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.
- சிவகாசி மாநகராட்சி மேயரின், கணவர் சென்ற இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது…விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயராக திமுக கட்சியைச் சேர்ந்த சங்கீதா இன்பம் உள்ளார். இவரது … Read more
- சிறுவர் பூங்கா நவீன சுகாதார வளாகம்.., திறந்து வைத்தார் வெங்கடேசன் எம். எல். ஏ.மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் ரூபாய் 14.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் … Read more
- திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதப்பூதான்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் கூட்டு நலச் … Read more
- தடம் புரண்டு சாலைக்கு வந்த சரக்கு ரயில்..!காஞ்சிபுரம் மாவட்டம் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு சாலைக்கு வந்ததால், பொதுமக்கள் அலறி … Read more
- தீபாவளி பண்டிகைக்கு, 2 கோடி ரூபாய்க்கு கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு…விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் ரெங்கப்பநாயக்கன்பட்டி, மங்காபுரம், வன்னியம்பட்டி பகுதிகளில் … Read more
- தொடர் இறக்கத்தில் தங்கம்.., இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.இன்று (அக்டோபர் … Read more
- கண்களைக் கட்டிக் கொண்டே கின்னஸ் சாதனை படைத்த சிறுமி..!செஸ் விளையாட்டில் சிறுமி ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டே கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.மலேசியாவை சேர்ந்த … Read more
- ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்தியா..!ஆசிய விளையாட்டின் ஒரு பகுதியாக கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.இறுதிப்போட்டியில் … Read more
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் சாதனையின் ஊற்றுக்கண் தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 263: பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்இறை வரை நில்லா வளையும், … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 540:உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் பொருள் (மு.வ): ஒருவன் எண்ணியதை விடாமல் … Read more
- உலக விண்வெளி வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி கல்லூரி பேராசிரியர்…நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் செயற்கைக்கோள், இஸ்ரோ செயல்பாடு, விண்வெளி பயணம், … Read more
- மேக்ஸ் பிளாங்க் நினைவு தினம் இன்று (அக்டோபர் 4, 1947)…மேக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் … Read more
- “சாட் பூட் திரீ” திரை விமர்சனம்..!யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து அருணாச்சாலம் வைத்தியநாதன் இயக்கத்தில் பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, … Read more
