• Sat. Apr 20th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 22, 2022

• வாழ்க்கை எனும் ஏணியில் யாரையும் நம்பி ஏறக்கூடாது..
வீழ்ந்தால் மீண்டும் எழுந்து வருவேன் என்ற தன்னம்பிக்கை
எப்போதும் இருக்க வேண்டும்.

• உன்னால் முடியாது என பலர் கூறும் வார்த்தைகள் தான்
வெற்றிக்கான போதையை கொடுக்கும் வார்த்தையாக இருக்கும்.

• எங்கு நீங்கள் ஒதுக்கப்படுகிறீர்களோ..
அவமானம் செய்யப்படுகிறீர்களோ..
அங்கு நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக
உருவடுப்பது தான் உண்மையான வெற்றி.

• வாழ்க்கை என்பது உன் கையில் உள்ள ரேகையில் இல்லை..
உன் மனதில் உள்ள தன்னம்பிக்கையில் உள்ளது.

• உன்னை நீயே யாருடனும் ஒப்பிடாதே..
உன் சிறப்பு எது என்பதை நீயே உணராத பட்சத்தில்
மற்றவர்கள் அறிவது என்பது எப்படி சாத்தியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *