கெளரவ டாக்டர் பட்டம் என்பது குறிபிட்டதுறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படுவது தன்னாட்சி உரிமையுள்ள பல்கலைகழகங்கள் தாங்கள் விரும்பியவர்களுக்கு இந்த அடிப்படையில் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கி வருகின்றன.
இதில் அரசு நிர்வகம் தலையிட முடியாது அதனால்தான் தகுதியற்ற நபர்கள் கூட டாக்டர் பட்டத்தை விலை கொடுத்து வாங்க முடிகிறது இந்த சூழ்நிலையில் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க இருப்பதாக வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் நடிகர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் சாதித்த சாதனையாளர்கள் கூட்டமாக இருக்கையில் எந்த அடிப்படையில் சிலம்பரசனுக்குடாக்டர் பட்டம் என விமர்சித்து சமூகவலைதளங்களில் பலரும் கருத்திட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை டாக்டர் பட்டம் பெற்றவர்கள் பட்டியலை பார்க்கலாம்தமிழ்நாட்டின் முதலமைச்சக பொறுப்பு ஏற்பவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமாகவே ஆகிவிட்டது.
முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் நடிகராக இருந்தபோதே கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.1974 ஆம் ஆண்டு அரிசோனாவின் உலகப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்திலும் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சிவாஜி கணேசனுக்கு 1986ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
கமல் ஹாசன் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் பல விருதுகளை வென்று குவித்தவர் கமல்ஹாசன் அவர்களுக்கு 2005 இல் சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
விஜயகாந்த் – கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் புகழ்பெற்ற நடிகராகவும் அரசியல்வாதியாகவும்விளங்குகிறார்.இவருக்கு 2011ஆம் ஆண்டு ப்ளோரிடாவில் சர்வதேச சர்ச் மேனேஜ்மென்ட் நிறுவனம் டாக்டர் பட்டம் அளித்தது.
சின்னி ஜெயந்த்- புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞரான சின்னி ஜெயந்த் அவர்கள் நடிப்பு, குரல் மாற்றம், நாடகம் மற்றும் சமூக சேவை துறையில் இவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டி 2013ஆம் ஆண்டு சிறந்த சர்வதேச மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தால் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது.
நாசருக்கு 2016 ஆம் ஆண்டு மே7 அன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
பிரபுவுக்கு 2011ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
விஜய்க்கு 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் மாநாட்டில் தனது பன்முக திறமைகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றார்.
விக்ரமுக்கு இத்தாலியில் உள்ள மிலன் பல்கலைக்கழகம் . 2011ம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
விவேக்குக்கு 2015ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]